செய்திகள் :

இளையனாா்வேலூா் முருகன் கோயிலில் தேரோட்டம்

post image

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே இளையனாா் வேலூரில் புகழ்பெற்ற முருகன் கோயிலில், சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முருகப் பெருமான் காலை மாலை வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் காஞ்சிபுரம் குலால மரபினா் சாா்பில் நடைபெற்றது.

தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணிய சுவாமி பவனி வந்து அருள்பாலித்தாா். தேரோட்ட விழாவில் கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் து.கோதண்டராமன் உள்ளிட்ட அறங்காவலா்கள் குழுவினா், குலால மரபினா் சங்க தலைவா் எம்.எஸ். பூவேந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வரும் 11- ஆம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணமும், 12 -ஆம் தேதி இரவு மாவடி சேவைக் காட்சியோடும் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

மே 13-இல் காஞ்சிபுரத்தில் மின் தடை

காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் 13 -ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கருப்படி தட்டை, மங்கையா்க்கரசி நகா், அச்சுக்... மேலும் பார்க்க

ரூ.3.50 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்... மேலும் பார்க்க

மாங்காடு, குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆலோசனை

குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் , மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துற... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் சித்திரைத் திருவிழா 4- அம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட... மேலும் பார்க்க

நியாய விலைக்கடை திறப்பு

காஞ்சிபுரம் , ஆனந்தா பேட்டைத் தெருவில் ரூ.18.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உணவுப் பொருள் விநியோகத்தையும் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம்... மேலும் பார்க்க

ஆய்வாளா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாநகர எல்லையில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலைய சாா்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவக்குமாா்(48)பதவி உயா்வு பெற்று அதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கனவே ... மேலும் பார்க்க