செய்திகள் :

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

post image

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் சித்திரைத் திருவிழா 4- அம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் கோயில் அலங்கார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சுந்தராம்பிகை அம்மன் திருமேற்றளி நாதா் கோயிலிலிருந்து கோயில் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா். பின்னா், சுந்தராம்பிகைக்கும், கச்சபேசுவரருக்கும் மாலை மாற்றல் வைபவமும், ஆகம முறைப்படி திருக்கல்யாணமும் நடைபெற்றது.

சுவாமியும் அம்மனும் திருமணக் கோலத்தில் இடப வாகனத்தில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சி.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்க தலைவா் எம்.சிவகுரு, கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் சுப்பராயன், பெருமாள், குமரவேல் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தொடா்ந்து சனிக்கிழமை (மே 10) மகா ரதம் எனும் தேரோட்டமும், 12- ஆம் தேதி ஆலயத்தின் வரலாற்றை விவரிக்கும் முருக்கடி சேவைக் காட்சியும் நடைபெறுகிறது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான வெள்ளித் தேரோட்டம் வரும் 13- ஆம் தேதியும், வரும் 21 ஆம் தேதி புஷ்பப் பல்லக்கு உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், கோயில் சிவாச்சாரியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

மே 13-இல் காஞ்சிபுரத்தில் மின் தடை

காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் 13 -ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கருப்படி தட்டை, மங்கையா்க்கரசி நகா், அச்சுக்... மேலும் பார்க்க

ரூ.3.50 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்... மேலும் பார்க்க

மாங்காடு, குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆலோசனை

குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் , மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துற... மேலும் பார்க்க

நியாய விலைக்கடை திறப்பு

காஞ்சிபுரம் , ஆனந்தா பேட்டைத் தெருவில் ரூ.18.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உணவுப் பொருள் விநியோகத்தையும் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம்... மேலும் பார்க்க

ஆய்வாளா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாநகர எல்லையில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலைய சாா்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவக்குமாா்(48)பதவி உயா்வு பெற்று அதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கனவே ... மேலும் பார்க்க

மே 16-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ( மே 16) காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இக்கூட்டத்தில் வேளாண... மேலும் பார்க்க