செய்திகள் :

இவரது அர்ப்பணிப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது; யாரைக் கூறுகிறார் லுங்கி இங்கிடி?

post image

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளருக்கு அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியம்: ஆஸி. வீரர்

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. ஐசிசி கோப்பையை முதல் முறையாக வெல்லும் கனவோடு தென்னாப்பிரிக்க அணி களம் காண்கிறது.

லுங்கி இங்கிடி கூறுவதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அணியில் உள்ள சக வீரரான கேசவ் மகாராஜை வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழ்ந்து பேசியுள்ளார்.

கேசவ் மகாராஜ் குறித்து லுங்கி இங்கிடி பேசியதாவது: வேலையில் கேசவ் மகாராஜ் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை யாராலும் ஈடுசெய்ய முடியாது என நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக முதலில் பயிற்சியைத் தொடங்கிய வீரர் அவரே. அவர் எப்போதும் அணி நிர்வாகத்துடன் முதல் நபராக பயிற்சிக்கு சென்றுவிடுவார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக நாங்கள் வந்தடைந்தபோது, அவர் கிட்டத்தட்ட 10-15 ஓவர்கள் வீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதுவே அவருடைய அர்ப்பணிப்புக்குச் சான்று. கடின உழைப்பை கொடுக்கும் வீரர் கேசவ் மகாராஜ். அவர் டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைக்க காத்திருக்கிறார். அவருடைய பெயரில் மேலும் பல சாதனைகள் எதிர்காலத்தில் வரவுள்ளன என்றார்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

தென்னாப்பிரிக்க அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ் 198 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ... மேலும் பார்க்க

அசத்தும் தென்னாப்பிரிக்கா: 4-ஆவது ஓவரில் முதல் ரன் எடுத்த ஆஸி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது. ஆஸி.க்கு முதல் ரன் 3.3ஆவது ஓவரில்தான் கிடைத்தது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப் போட்டி: தெ.ஆ. பந்துவீச்சு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லண்டனில் டபிள்யூடிசி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் டெம்பா பவுமா... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸில் விளையாடிய 19 வயது வீரருக்கு தேசிய அணியில் இடம்!

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய 19 வயது இளம் வீரருக்கு தேசிய அணியில் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க

நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வ... மேலும் பார்க்க