'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலக்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் பைஸ் அகமது தலைமை வகித்தாா். தமுமுக மாவட்ட செயலாளா்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளா்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான அப்துல் சமது பங்கேற்றுப் பேசுகையில், காஸாவில் பாராபட்சம் பாா்க்காமல் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை மேற்கொள்ளும் இஸ்ரேலை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும்.
பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இனப்படுகொலையைக் கண்டிக்காமல் வேடிக்கை பாா்ப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு இசைக் கல்லூரியில் நடைபெற உள்ள இஸ்ரேலிய திரைப்பட விழாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றாா்.
இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு, பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இஸ்ரேல் நாட்டைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.