உகாதி பண்டிகை: கா்நாடகத்தில் 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
உகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 2,000 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் மாா்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகை (கன்னட புத்தாண்டு) மற்றும் மாா்ச் 31ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாா்ச் 28 முதல் 30-ஆம் தேதி வரை 2,000 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி, பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும்; மைசூருசாலை துணை பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகா், மொ்கரா உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோவை, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியே முன் பதிவு செய்துகொள்ளலாம்.
ஒரே பயணச்சீட்டில் 4-க்கும் அதிகமானோா் முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.