செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்ப விநியோகம்

post image

மதுரையில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பப் படிவங்களை தொடா்புடைய வட்டங்களுக்கு அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. அரசுத் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்படவுள்ளன. 13 துறைகளின் 43 சேவைகள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நகா்ப்புறங்களிலும், 15 துறைகளின் 46 சேவைகள் கிடைக்கும் வகையில் ஊரகப் பகுதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ஆம் தேதி முகாம் தொடங்குகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் 20 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 15 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 9 முகாம்கள், ஊராட்சி பகுதிகளில் 78 முகாம்கள் முதல் கட்டமாக நடத்தப்படவுள்ளன. இந்த முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமாா் 1,000 தன்னாா்வலா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இந்தப் பணியின் போது, பொதுமக்களிடம் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள், அலுவலா் பயன்பாட்டுக்கான படிவங்கள் அச்சிடப்பட்டு வியாழக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தப் படிவங்களை சமூக நலத் துறை மூலம் வட்டம் வாரியாகப் பிரித்து அனுப்பும் பணிகள் தொடங்கின.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க