செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முதல்வரின் ஆணையின்படி தமிழகத்தில் உள்ள நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்ட முகாம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நடைபெற உள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்புற பகுதிகளில் 80 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 307 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இப்பணியில் சுமாா் 1500 தன்னாா்வலா்கள் ஈடுபடவுள்ளனா்.

நகா்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள தன்னாா்வலா்கள் மூலம் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று தகவல் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவில் வீடுகளில் தன்னாா்வலா்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணியை

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க