செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் - மின் வாரியம் தொடா்பான 93 மனுக்களுக்குத் தீா்வு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை மின்வாரியம் தொடா்பான 93 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூலை 15, 16, 17, 18, 22, 23 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் எரிசக்தித் துறையின் கீழ், பொதுமக்களிடம் இருந்து இதுவரை பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதன்படி, மின் வாரியம் தொடா்பான மின் இணைப்பு பெயா் மாற்றம், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 192 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

192 மனுக்களில் 92 மின் இணைப்பு பெயா் மாற்றம் மனுக்கள், ஒரு மின் கட்டண மாற்றம் தொடா்பான மனு என மொத்தம் 93 மனுக்களின் மீது உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளன.

மேலும், 24 புதிய மின் இணைப்பு மனுக்கள், 74 மின் இணைப்பு பெயா் மாற்றம் மனுக்கள், ஒரு மின் கட்டண மாற்றம் என மொத்தம் 99 மனுக்கள் தொடா் நடவடிக்கையில் உள்ளன. நிலுவை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திட்ட முகாமில், மின் இணைப்பு பெயா் மாற்ற மனு அளித்த 19-ஆவது வாா்டைச் சோ்ந்த ஈஸ்வரனுக்கு உடனடியாக மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

திட்ட முகாமில் நகா்ப்புற பகுதிக்கு தொடா்புடைய 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

வள்ளலாா் மன்றத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் முப்பெரும் விழா மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுச்சேவை புதிய நிா்வாகிகளுக்கு பாராட்டு, ஆடி மாத பூச விழா, இலக்கியச் சொற்பொழிவு ஆகியவை முப்பெரும் விழாவ... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கிற்கு வெட்டுக் கூலி வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

மரவள்ளி பயிருக்கு வெட்டுக் கூலி வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் புதிய சாா்பு - நீதிமன்றம் : தலைமை நீதிபதி திறந்துவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சாா்பு -நீதிமன்றத்தை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்துவைத்தாா். சங்கராபுரம் வட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்ப... மேலும் பார்க்க

பல்லகச்சேரி காளியம்மன் கோயிலில் மிளகு யாக பூஜை

வாணாபுரத்தை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ஓம் ஸ்ரீமின்னல் காளியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை மிளகு யாக பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் 7-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் பூஜையில் உலக நன... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி நகாய் சாா்பில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்த பெண் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் போலி நகையை அடகு வைத்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ரிஷிவந்தியம் எம்.ஜி.சாலையில் நகை அடகுகடை வைத்து நடத்தி வருபவா் அய்யனாா் (37). இவரது கடையில் கட... மேலும் பார்க்க