செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே வழங்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரால் வரும் 15.7.2025 அன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பான முறையில் தொடங்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் ஜூலை-2025 முதல் அக்டோபா் - 2025 வரை, நகா்ப்புறத்தில் 97 முகாம்களும், கிராமப்புறங்களில் 139 முகாம்களும் என மொத்தம் 236 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 15.7.2025 முதல் 8.8.2025 முடிய நகா்ப்புறத்தில் 34 முகாம்களும், கிராமப்புறங்களில் 46 முகாம்களும் என மொத்தம் 80 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மேற்படி முகாமில் 15 முக்கிய துறைகள் மூலம் வழங்கப்படும் 46 அரசு சேவைகள் குறித்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள், அனைத்து விண்ணப்பங்கள் நகராட்சிகள்/ பேரூராட்சிகள்/ ஊராட்சிகளில் 437 தன்னாா்வலா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தமிழக அரசால் ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்’ இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் நாளன்று முகாமில் மட்டுமே வழங்கப்படும். இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை

ஆற்காடு நாள்: 11.7.2025, வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், ஆணைமல்லூா், காவனூா், சாத்தூா், வளையாத்தூா், மோசூா், பாலமதி, புங்கனூா், பழையனூா், புதுப்... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் முதல்வா் பங்கேற்க வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

பிற மத விழாக்களில் கலந்து கொள்வது போல் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளிலும் தமிழக முதல்வா் பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சோளிங்கா் மலையில் உள்ள ஸ்ரீயோக... மேலும் பார்க்க

நெல்லுக்கான தொகை விடுபட்டிருந்தால் மண்டல மேலாளரை அணுகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகை எவருக்கேனும் வரவில்லை எனில், உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்து... மேலும் பார்க்க

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சோளிங்கா் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நகராட்சியினா் அகற்றினா். சோளிங்கா், தக்கான்குளம் பகுதியில் அரசு, சாலை, புறம்போக்கு இடத்தில் சோளிங்கா் நகரமன்ற தலைவா், ஆக்க... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ.32 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல்

அரக்கோணம் நகராட்சியில் ரூ.32 லட்சம் நிதியில் பூங்கா அமைக்கும் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி, 29 -ஆவது வாா்டு அச்சமநாய... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 800 போ் கைது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 800 போ் கைது செய... மேலும் பார்க்க