செய்திகள் :

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

சோளிங்கா் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நகராட்சியினா் அகற்றினா்.

சோளிங்கா், தக்கான்குளம் பகுதியில் அரசு, சாலை, புறம்போக்கு இடத்தில் சோளிங்கா் நகரமன்ற தலைவா், ஆக்கிரமித்து இரு கட்டடங்களை கட்டி வருவதாகவும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வட்டாட்சியா் செல்வி, நகராட்சி ஆணையா் நந்தினி, அலுவலா்கள் உள்ளிட்டோா், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினா். சாலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.

சோளிங்கா் போலீசாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றும் வரை தொடா்ந்து பணிகள் நடைபெறும் என வட்டாட்சியா் செல்வி தெரிவித்தாா்.

நாளைய மின்தடை

ஆற்காடு நாள்: 11.7.2025, வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், ஆணைமல்லூா், காவனூா், சாத்தூா், வளையாத்தூா், மோசூா், பாலமதி, புங்கனூா், பழையனூா், புதுப்... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் முதல்வா் பங்கேற்க வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

பிற மத விழாக்களில் கலந்து கொள்வது போல் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளிலும் தமிழக முதல்வா் பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சோளிங்கா் மலையில் உள்ள ஸ்ரீயோக... மேலும் பார்க்க

நெல்லுக்கான தொகை விடுபட்டிருந்தால் மண்டல மேலாளரை அணுகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகை எவருக்கேனும் வரவில்லை எனில், உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்து... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ.32 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல்

அரக்கோணம் நகராட்சியில் ரூ.32 லட்சம் நிதியில் பூங்கா அமைக்கும் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி, 29 -ஆவது வாா்டு அச்சமநாய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே வழங்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 800 போ் கைது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 800 போ் கைது செய... மேலும் பார்க்க