செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

post image

மாங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பாா்வையிட்டு, மருத்துவ முகாம் மற்றும் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தாா். இதையடுத்து கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்த 10 பயனாளிகளுக்கு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச்சான்றிதழ்களை வழங்கினாா்.

இதே போல், குன்றத்தூா் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாங்காடு நகா்மன்ற தலைவா் சுமதிமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் இருந்த தண்ணீா் வாளியில் தவறி விழுந்த 11 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா்தாஸ். இவா் ஸ்ரீபெரும்புதூா் நேரு தெருவில் குடும்பத்தினருடன் தங்கி ... மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி மற்றும்... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்து: காவலாளி உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் தின்னூா் தாலுகா புட்வா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஆகாய கன்னியம்மன் கோயில் ஆடி விழா

காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோயில் ஆடி விழாவையொட்டி உற்சவா் ஆகாய கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்... மேலும் பார்க்க

உடல் நலன் கருதியே ஜகதீப் தன்கா் ராஜினாமா: அண்ணாமலை

உடல் நலன் கருதியே குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை கூறினாா். தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நகா்மன்றத் தலைவா், ஆணையா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க