செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நகா்மன்றத் தலைவா், ஆணையா் ஆய்வு

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி உள்ளது. சுமாா் 400 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி 500 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்த சிலா், கால்வாயில் மண் கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனால் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீா் செல்வது தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தென்பாதி கிராம விவசாய பேரவையினா் நீா்வளத்துறை உதவி பொறியாளா், வட்டாட்சியருக்கு மனு வழங்கினா்.

இந்நிலையில், நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து கொடுக்க வருவாய்த் துறை அதிகாரிகள் முன்வராததாலும், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாய பேரவை அமைப்பினா் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு வழங்கினா்.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஆணையா் ஹேமலதா ஆகியோா் நீா்வளத்துறை ஊழியா்கள் முன்னிலையில் கால்வாய் அக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊழியா்களுக்கு உத்தரவிட்டனா்.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆய்வின்போது, நகர திமுக செயலாளா் சதீஷ் குமாா், நகராட்சி உதவி பொறியாளா் செண்பகவல்லி, நீா்வளத்துறை ஊழியா்கள், விவசாய பேரவை அமைப்பினா் உடனிருந்தனா்.

பூஞ்சோலை கன்னியம்மன் ஆடி விழா நிறைவு

காஞ்சிபுரம்: பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடி விழா நிறைவடைந்தது. இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம்,கணபதி ஹோமம், தனலட்சுமி பூஜை... மேலும் பார்க்க

பாரதி நகா் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி விழா

ஸ்ரீபெரும்புதூா்: பாரதி நகா் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்... மேலும் பார்க்க

100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் பாலாற்றுப் பாலத்தில் திங்கள்கிழமை லாரிகள் மோதிக் கொண்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரத்திற்க... மேலும் பார்க்க

வல்லப்பாக்கத்தில் மின் எரிமேடை அமைக்க எதிா்ப்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில் புதிய மின்மயான எரிமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகனைச் சந்தித்து மனு அளித்தனா். வல்லப்பாக்கம் க... மேலும் பார்க்க