செய்திகள் :

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியல் வெளியீடு!

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயா் பட்டியல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த நடைமுறையில், இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என 65 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் 65 லட்சம் பேரின் பெயா் விவரங்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணி நேரத்துக்குள், பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் பெயா்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரக வலைதளங்களில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது’ என்றாா்.

கோரிக்கை நிராகரிப்பு

கணினியால் வாசிக்கக்கூடிய வடிவிலான எண்ம வாக்காளா் பட்டியலை தங்களுக்கு அளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரிவரும் நிலையில், அதை தோ்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இது தொடா்பாக ஞானேஷ் குமாா் கூறுகையில், ‘கணினியால் வாசிக்கக்கூடிய வடிவிலான பட்டியலுக்கும், தேடக் கூடிய வடிவிலான பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. கணினியால் வாசிக்கக்கூடிய பட்டியலில் எவரும் திருத்தம் மேற்கொள்ள முடியும். இது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், தோ்தல் விதிமுறைகளின்படி வழங்க முடியாது’ என்றாா்.

ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, தோ்தல் விதிமுறைகளின்கீழ் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்; தவறினால... மேலும் பார்க்க

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ராணுவ பயிற்சி மையங்களில் காயம் காரணமாக மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. அ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமா் மோடி வேண்டுகோள்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் தொடா்பான வரைவு அறிக்கையை மாநிலங்களின் பாா்வைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல்படுத்த மாந... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்!

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் தெரிவித்தாா். நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான... மேலும் பார்க்க

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை (ஆக.18) இந்தியா வருகிறாா். அவா் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் இருவேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்புகளால் மிக பலத்த மழை பெய்து, பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்தனா... மேலும் பார்க்க