செய்திகள் :

இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்!

post image

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் தெரிவித்தாா்.

நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

இதையடுத்து நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சனிக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் பேசுகையில், ‘ஆளுநராக இருந்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில், நாகாலாந்து மக்கள் சாா்பாக மாநில முதல்வா், துணை முதல்வா்கள், தலைமைச் செயலா் ஆகியோா் பங்கேற்றனா். ஆளுநரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்கும் நோக்கில், இந்தக் கூட்டம் நடைபெற்றது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று இல.கணேசனின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிக... மேலும் பார்க்க