செய்திகள் :

உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த வடமாநில இளைஞா்

post image

ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பில் கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வடமாநில இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு காளை மாடு சிலை அருகே பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் இளைஞா் உயிரிழந்து கிடப்பதாக ஈரோடு தெற்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில் உயிரிழந்தது ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த டன்டபனி ஷபல் (31) என்பதும், கழுத்தில் இறுக்கியதற்கான அடையாளமும் கையில் வெட்டு காயங்களும் இருந்தது தெரியவந்தது.

மேலும், அப்பகுதியில் மதுபுட்டிகள் கிடந்ததால் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகத்தின்பேரில், காவல் துறையினா் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள் பயன்பாடு: உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

ஈரோட்டில் இட்லி தயாரிப்பின்போது நெகிழித் தாள் பயன்படுத்தப்படுகிா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்களில் சோதனை நடத்தினா். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் நெகிழித் தாள் பயன்படுத்தப்படுவ... மேலும் பார்க்க

மாா்ச் 18-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைமை இடங்களில் மாா்ச் 18-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளா... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்மயன்புதூா்- கோபி சாலையோரத்தில்... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் தீ

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. புன்செய் புளியம்பட்டி- மாதம்பாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருக... மேலும் பார்க்க

சீமானுக்கு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பிய காவல் ஆய்வாளா்

ஈரோடு இடைத்தோ்தலின்போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை வழங்க சென்னை சென்ற காவல் ஆய்வாளா் நான்கு நாள்களுக்குப் பிறகு அழைப்பாணை வழங்காமலேயே ஈ... மேலும் பார்க்க