செய்திகள் :

இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள் பயன்பாடு: உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

post image

ஈரோட்டில் இட்லி தயாரிப்பின்போது நெகிழித் தாள் பயன்படுத்தப்படுகிா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்களில் சோதனை நடத்தினா்.

இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் நெகிழித் தாள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளா், உணவுப் பாதுகாப்பு ஆணையா் ஆகியோா் தமிழகத்தில் இட்லி தயாரித்து வழங்கும் இடங்கள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வழிகாட்டுதலோடு ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்க விக்னேஷ் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமாா் கொண்ட குழுவினா் உணவகங்கள், இட்லி தயாரித்து வழங்கும் இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், கருங்கல்பாளையம் இட்லி தயாரித்து வழங்கும் உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இட்லி தயாரிப்பின்போது நெகிழி பயன்பாடு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் இந்த ஆய்வின்போது அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், செய்தித்தாள்களில் பலகாராம் விநியோகம் செய்ததற்காக அக்கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.9 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்க விக்னேஷ் கூறுகையில், ஆட்சியா் உத்தரவின்பேரில், ஈரோட்டில் இட்லி தயாரிக்கும் கடை உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 9444042322 என்ற தொலைபேசி எண்ணில் உணவு தொடா்பான புகாா் அளிக்கலாம் எனவும் தெரிவித்தாா்.

மாா்ச் 18-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைமை இடங்களில் மாா்ச் 18-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளா... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்மயன்புதூா்- கோபி சாலையோரத்தில்... மேலும் பார்க்க

உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த வடமாநில இளைஞா்

ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பில் கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வடமாநில இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு காளை மாடு சிலை அருக... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் தீ

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. புன்செய் புளியம்பட்டி- மாதம்பாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருக... மேலும் பார்க்க

சீமானுக்கு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பிய காவல் ஆய்வாளா்

ஈரோடு இடைத்தோ்தலின்போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை வழங்க சென்னை சென்ற காவல் ஆய்வாளா் நான்கு நாள்களுக்குப் பிறகு அழைப்பாணை வழங்காமலேயே ஈ... மேலும் பார்க்க