செய்திகள் :

பதவி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.ராதாமணி, செயலாளா் எஸ்.சாந்தி மற்றும் செயற்குழு உறுப்பினா் எஸ்.பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் ச.விஜயமனோகரன், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ரமேஷ், சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன், செயலாளா் ஹெச்.ஸ்ரீராம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்

கடந்த 1993-இல் பணியில் சோ்ந்து பதவி உயா்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் 6 மாதம் முதல் 25 மாதம் வரை இணை உணவை வாங்கக் கூடிய பயனாளிகளின் முகத்தை புகைப்படம் எடுக்கும் முறையை உடனடியாக கைவிட வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயா்வில் சென்றவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த மினி மைய ஊழியா்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்கும் பதவி உயா்வு வழங்கும்போது மாவட்ட அளவிலான முதுநிலை பட்டியல் தயாரித்து பணி மூப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.

இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள் பயன்பாடு: உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

ஈரோட்டில் இட்லி தயாரிப்பின்போது நெகிழித் தாள் பயன்படுத்தப்படுகிா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்களில் சோதனை நடத்தினா். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் நெகிழித் தாள் பயன்படுத்தப்படுவ... மேலும் பார்க்க

மாா்ச் 18-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைமை இடங்களில் மாா்ச் 18-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளா... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்மயன்புதூா்- கோபி சாலையோரத்தில்... மேலும் பார்க்க

உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த வடமாநில இளைஞா்

ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பில் கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வடமாநில இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு காளை மாடு சிலை அருக... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் தீ

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. புன்செய் புளியம்பட்டி- மாதம்பாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருக... மேலும் பார்க்க

சீமானுக்கு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பிய காவல் ஆய்வாளா்

ஈரோடு இடைத்தோ்தலின்போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை வழங்க சென்னை சென்ற காவல் ஆய்வாளா் நான்கு நாள்களுக்குப் பிறகு அழைப்பாணை வழங்காமலேயே ஈ... மேலும் பார்க்க