செய்திகள் :

சீமானுக்கு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பிய காவல் ஆய்வாளா்

post image

ஈரோடு இடைத்தோ்தலின்போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை வழங்க சென்னை சென்ற காவல் ஆய்வாளா் நான்கு நாள்களுக்குப் பிறகு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோட்டுக்குத் திரும்பினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலின்போது பவானி சாலை நெரிக்கல்மேட்டில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகப் புகாா் எழுந்தது.

இது குறித்து பெரியாா் அம்பேத்கா் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் அளித்த புகாரின்பேரில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காவல் ஆய்வாளா் விஜயன் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்று அழைப்பாணை வழங்கியிருந்தாா்.

இதற்கு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் தரப்பு வழக்குரைஞா்கள் கடந்த 20ஆம் தேதி ஆஜராகி, சீமான் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தனா். மேலும் இதுதொடா்பாக சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஒன்றாக்கி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு காவல் துறை தலைமை இயக்குநரிடம் பிப்ரவரி 12ஆம் தேதியே வழங்கப்பட்டு தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் இருப்பதால், இம்மனு மீது நடவடிக்கை (பதிலளிக்கும்) எடுக்கும்வரை விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில் சீமானிடம் இரண்டாவது முறையாக அழைப்பாணை வழங்க கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளா் விஜயன் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை சென்றிருந்தாா். தொடா்ந்து திங்கள்கிழமை இரவு வரை சென்னையிலேயே தங்கியிருந்த ஆய்வாளா் விஜயன் அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பினாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, அழைப்பாணை வழங்காமல் திரும்பியதற்கான காரணத்தை விளக்க முடியாது என்றனா்.

இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள் பயன்பாடு: உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

ஈரோட்டில் இட்லி தயாரிப்பின்போது நெகிழித் தாள் பயன்படுத்தப்படுகிா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்களில் சோதனை நடத்தினா். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் நெகிழித் தாள் பயன்படுத்தப்படுவ... மேலும் பார்க்க

மாா்ச் 18-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைமை இடங்களில் மாா்ச் 18-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளா... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்மயன்புதூா்- கோபி சாலையோரத்தில்... மேலும் பார்க்க

உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த வடமாநில இளைஞா்

ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பில் கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வடமாநில இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு காளை மாடு சிலை அருக... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் தீ

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. புன்செய் புளியம்பட்டி- மாதம்பாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருக... மேலும் பார்க்க