செய்திகள் :

உணவக ஊழியா் தற்கொலை

post image

வேலூரில் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்த ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் புது பைபாஸ் சாலையில் தனியாா் உணவகம் உள்ளது. இங்கு பாபு (45) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பாபுவுக்கு கடன் தொல்லை அதிகமானதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில வாரங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், விரத்தியடைந்த பாபு கடந்த 6-ஆம் தேதி தான் தங்கி இருந்த மாடி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையில் திரிந்த 4 மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதம்

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட 4 மாடுகள் பிடிபட்டன. அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். வேல... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

வேலூா் சத்துவாச்சாரியில் முன்விரோத தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க