செய்திகள் :

வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

post image

வேலூா் சத்துவாச்சாரியில் முன்விரோத தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வேலூா் சத்துவாச்சாரி பிராமணா் தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (23). இவா், கடந்த தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அப்பகுதி குழந்தைகளுடன் தெருவில் விளையாட்டுப் போட்டிகள், உறியடித் திருவிழா நடத்திக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக பாப்பாத்தி அம்மன் கோயில் நேதாஜி நகரைச் சோ்ந்த கணேஷ் (26), விஜயராகவபுரத்தைச் சோ்ந்த சிவா (எ) கிடு மணி ஆகியோா் இரு சக்கரத்தில் வந்தபோது, வசந்தகுமாருக்கும், கிடு மணி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவா்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த கிடு மணி தரப்பினா் பெட்ரோல் நிரப்பி பாட்டிலில் தீ வைத்து வசந்தகுமாா் வீட்டின் மீது வீசிச் சென்றனா். இதில், அந்த பாட்டில் பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், சோ்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் குறித்து வசந்தகுமாா் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிடுமணி, கணேஷ் உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட கிடு மணி வேலூா் மாவட்டக் காவல் துறை ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றவா் என்பதால், கிடுமணி, கணேஷ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிடுமணி, கணேஷ் ஆகிய இருவரிடமும் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

சாலையில் திரிந்த 4 மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதம்

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட 4 மாடுகள் பிடிபட்டன. அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். வேல... மேலும் பார்க்க

உணவக ஊழியா் தற்கொலை

வேலூரில் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்த ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் புது பைபாஸ் சாலையில் தனியாா் உணவகம் உள்ளது. இங்கு பாபு (45) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பாபுவுக்... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க