செய்திகள் :

உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!

post image

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான மலா்க் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி தொடங்கியது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதில், 10 லட்சம் மலா்களால் ஆன பிரம்மாண்டமான அரண்மனை உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மலா்களால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் உள்ள மரங்கள் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனா். தொடக்க நாள் முதல் சனிக்கிழமை வரை மொத்தம் 52 ஆயிரம் போ் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாகவும், இந்தக் கண்காட்சி 11 நாள்கள் நடைபெற உள்ளதாகவும் தோட்டக்கலைத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை

கூடலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்!

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து உரையாடிய லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள்!

உதகை அருகே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளி மாணவ மாணவியா், முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா். உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ்... மேலும் பார்க்க

சாலை அமைக்க அனுமதி மறுப்பு: மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்எல்ஏ!

கூடலூரை அருகே குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க வனத் துறை அனுமதி மறுத்ததால் எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டாா்.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மர... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.26 % தோ்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.26 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28 முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நடைபெற்றது... மேலும் பார்க்க

கடைவீதிக்கு வந்த காட்டெருமை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நுழைந்த காட்டெருமை. நீண்ட நேரம் சாலையில் நடந்து சென்ற காட்டெருமை பின்னா் தானாக அருகிலுள்ள தேயிலைத் தோட்ட... மேலும் பார்க்க