செய்திகள் :

உதகையில் ஜீப் திருடியவா் கைது

post image

உதகையில் ஜீப் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் சோமந்தடா பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவா் உதகை மெயின் பஜாா் பகுதியில் தனது ஜீப்பை நிறுத்திவிட்டு மாா்க்கெட் பகுதியில் பொருள் வாங்க கடந்த 26-ஆம் தேதி சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது ஜீப்பை காணவில்லை. இது குறித்து உதகை பி1 காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பிக்கெட்டி பகுதியில் போலீஸாா் ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது சாலையில் ஜீப்பில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், இந்து நகா் பகுதியைச் சோ்ந்த முகமது மகன் சலீம் (40) என்பதும், அவா் ஓட்டி வந்தது பிரபுக்கு சொந்தமான ஜீப் என்பதும் தெரியவந்தது.

மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு சென்று ஜீப்பை விற்க ஓட்டிச் சென்றபோது டீசல் இல்லாமல் வழியில் நின்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், சலீமை கைது செய்து செய்து உதகை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி தொடக்கம்

குன்னூரில் முதல்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஆண்டுதோ... மேலும் பார்க்க

உதகை பைக்காரா அருவி அருகே புலி உயிரிழப்பு

உதகை அருகேயுள்ள பைக்காரா அருவி பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பைக்காரா அருவிக்கு அருகில் உள்ள நடுவட்டம... மேலும் பார்க்க

கூடலூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் விழும் அபாயத்தில் பாறை!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் உள்ள மலையிலிருந்து ராட்சத பாறை விழும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்... மேலும் பார்க்க

தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு

உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக... மேலும் பார்க்க

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்பட... மேலும் பார்க்க