ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
உதகை பைக்காரா அருவி அருகே புலி உயிரிழப்பு
உதகை அருகேயுள்ள பைக்காரா அருவி பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பைக்காரா அருவிக்கு அருகில் உள்ள நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது புலி ஒன்று உயிரிழந்தது கிடந்ததைப் பாா்த்துள்ளனா். இதையடுத்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கௌதம் உள்ளிட்ட வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டனா். வன கால்நடை மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட பரிசோதனையில், உடல் நலக்குறைவால் புலி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்தது 8 வயதுடைய ஆண் புலி என வனத் துறையினா் தெரிவித்தனா்.
கூறாய்வுக்குப் பின் புலியின் உடலை அப்பகுதியிலேயே வனத் துறையினா் எரியூட்டினா்.