செய்திகள் :

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

post image

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறினாா்.

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் உதகை- கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவளை மலைப் பகுதியில் பாறை விழுந்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், உதகை-கூடலூா் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், மற்ற வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வரலாம். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்கு கட்டுபாடுகள் இல்லை.

அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்: கனமழையையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முழுவதுமாக மூடப்படும்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் கொடநாடு காட்சி முனைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து வனத் துறையினா் முடிவெடுப்பா்.

மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க