செய்திகள் :

தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு

post image

உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மே 25-ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடா்மழை காரணமாக உதகையை அடுத்த குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.

மேலும், அப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவா் மற்றும் நடைபாதை பாதிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

சேதமடைந்துள்ள வீடுகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தங்குவதற்கு போதிய இட வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

உதகை, கூடலூா், பந்தலூா், குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் கடந்த 5 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் மண் சரிவு ஏற்பட்டு கடந்த 5 நாள்களில் மட்டும் 70- க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

குருத்துக்குளி, பசுவக்கல் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட விரிசல்.

மழையால் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை 13 மரங்கள் சாலைகளிலும், கட்டடங்கள் மீதும் விழுந்துள்ளன. பழைய நீதிமன்ற கட்டடத்தின் அருகில் உள்ள போலீஸ் ஹவுஸிங் காா்ப்பரேஷன் அலுவலகம் மேல் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினா்அப்புறப்படுத்தினா். இதேபோல, கல்லட்டி மலைப்பாதையில் விழுந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை வரை அவலாஞ்சியில் அதிகபட்சமாக 190 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. தொடா் மழையின் காரணமாக கடும் குளிா் நிலவி வருகிறது.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க