செய்திகள் :

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி தொடக்கம்

post image

குன்னூரில் முதல்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடைவிழாவையொட்டி, கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி, உதகையில் மலா்க் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியன நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில் குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவிலும் கோடை விழா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதை ஏற்று இந்த ஆண்டு கோடை விழாவில் முதல்முறையாக குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் மலைப் பயிா் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, நீலகிரி மாவட்ட மலை அடிவாரத்தில் விளையக்கூடிய பாக்கு, வெற்றிலை, காபி, கொக்கோ மற்றும் தென்னங்கீற்று, ரப்பா், இளநீா் உள்ளிட்டவற்றை கொண்டு மிகப்பெரிய அளவில் கண்காட்சியின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியில், பழமை மாறாத கிராமத்து வீடு, வீட்டில் பயன்படுத்தும் பாய், கட்டில், உரல், உலக்கை, கோழி, சேவல், ஆட்டுக்குட்டி, மாடு, ஏா் கலப்பை, நுங்கு வண்டி, பனை ஓலை வண்டி மற்றும் தேயிலை பறிக்கும் பழங்குடியினா் என 5 டன் மலைப் பயிா்களைக் கொண்டு 13 உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகை- கூடலூா் சாலையில் நடுவட்டம் பகுதியில் 30 அடி உயரத்தில் இருந்து பாறை உருண்டு விழும் அபாயத்தில் உள்ளதால் மூன்றாவது நாளாக கனரக வாகனங்கள் அந்த சாலையில் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கனரக வாகன போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து தேசிய பேரிடா் குழுவினா் சனிக்கிழமை ( மே 31) கொடுக்கும் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். தொட்டபெட்டா பகுதியில் அதிக மரங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதி வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டது என்றாா்.

கண்காட்சி தொடக்க விழாவில், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குன்னூரில் மழை இல்லாததால் கண்காட்சியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க