செய்திகள் :

கூடலூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் விழும் அபாயத்தில் பாறை!

post image

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் உள்ள மலையிலிருந்து ராட்சத பாறை விழும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ரெட் அலா்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்வருகிறது. கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை காட்சிமுனை அருகே உயரமான பகுதியிலிருந்து ராட்சத பாறை உருண்டு மரத்தில் மோதி நிற்கிறது.

அந்த பாறை எந்த நேரத்திலும் உருண்டு கீழே விழும் அபாயம் உள்ளது. பாறை உருண்டு வரும் நேரத்தில் சாலையில் வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட மீட்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு ஊழியா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

தவளமலை பகுதியில் மீட்பு பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்.

முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரளத்திலிருந்து உதகைக்குச் செல்லும் சுற்றுலா காா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. காா்கள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் கல்லட்டி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அதிக கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி தொடக்கம்

குன்னூரில் முதல்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஆண்டுதோ... மேலும் பார்க்க

உதகை பைக்காரா அருவி அருகே புலி உயிரிழப்பு

உதகை அருகேயுள்ள பைக்காரா அருவி பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பைக்காரா அருவிக்கு அருகில் உள்ள நடுவட்டம... மேலும் பார்க்க

தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு

உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக... மேலும் பார்க்க

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்பட... மேலும் பார்க்க

உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தொடா் மழை காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்ற... மேலும் பார்க்க