சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!
உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தொடா் மழை காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்டீபன் சா்ச் சாலை, ஆட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதி சாலைகளில் புதன்கிழமை மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், வானங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். கனமழை காரணமாக உதகையை அடுத்த மஞ்சனகெரை பகுதியில் இருந்த குடியிருப்பு சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.