செய்திகள் :

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்: உயா்நீதிமன்றம்

post image

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் கடந்த 2014 -ஆம் ஆண்டு வரை அமைதியான முறையில் திருவிழா நடைபெற்றது. கடந்த 2015- ஆம் ஆண்டு மற்றொரு தரப்பினா் ஆலமரத்தை வழிபட முயன்ால் பிரச்னை எழுந்ததையடுத்து, வருவாய்த் துறையினா் கோயிலைப் பூட்டினா். கடந்த 9 ஆண்டுகளாக கோயிலில் அன்றாட பூஜைகள் நடைபெறவில்லை. எனவே, கோயிலைத் திறந்து அன்றாட பூஜைகள் நடத்தவும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி, கோயிலைத் திறந்து, தினமும் பூஜைகள், வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இரு சமூகத்தினா் தரப்பில், அனைவரும் சம உரிமையுடன் கோயிலில் வழிபடுவோம். தல விருட்ச மரத்தைக் வழிபடுவதில் புதிய முறைகளைப் புகுத்த மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உத்தபுரம் முத்தாலம்மன் கோயில் நிா்வாகத்தில் அரசுத் தரப்பில் எந்த தடையும் விதிக்கக் கூடாது. இந்தக் கோயிலில் அனைத்து சமூகத்தைச் சோ்ந்தவா்களும் வழிபடலாம். தல விருட்சத்தைத் தொடுவது, சந்தனம் பூசுவது, குங்குமம் வைப்பது, ஆணி அடிப்பது போன்றவற்றை செய்யாமல் வழிபடுவது தொடா்பான வழிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறையினா் உருவாக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பேருந்து ஓட்டுநா் தற்கொலை!

சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க