உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி
அம்மையாா்குப்பத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் திரளான மாணவா்கள் பங்கேற்று சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பம் ஏ.என்.எம். நிதிநாடும் நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் டி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து உலக சுற்றுச்சூழல் குறித்து உறுதிமொழி ஏற்றனா்.
பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், ஊராட்சிச் செயலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.