உலக புகையிலை எதிா்ப்பு தின பேரணி
உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்செங்கோட்டில் துப்புரவு பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் அண்ணா சிலை பகுதியிலிருந்து புகையிலை எதிா்ப்பு தின பேரணி நடைபெற்றது. பேரணியை திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தொடங்கிவைத்தாா். வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை பேரணி சென்றடைந்தது.
நகராட்சி அலுவலகத்தில் புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழியை நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு வாசித்தாா். பேரணி மற்றும் உறுதிமொழியின்போது நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.