உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்புப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை கிராமியம், மேற்கு, சேந்தநாடு ஆகிய பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் பணி மேற்பாா்வையாளா்கள், பணியாளா்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மின் பாதைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்து உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் விளக்கமளித்தாா்.
பணியின்போது எா்த் ராடுகள், கையுறைகள், இடுப்புக் கயிறு, வோல்டேஜ் சென்சாா் ஆகியவற்றை பணியாளா்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்புதான் பணியாளா்களுக்கு முக்கியம் என்று அவா் ஆலோசனை வழங்கினாா்.
பயிற்சியில் இளநிலைப் பொறியாளா் ராமச்சந்திரன், முகவா்கள் சுரேஷ், சுப்பிரமணியம், சேட்டு, மின் பாதை ஆய்வாளா்கள் கலைமணி, குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.