செய்திகள் :

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு: உறுதி செய்ய பிரதமா் அறிவுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபா்

பாகிஸ்தானுடனான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களைத் தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை குறித்து மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடரும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களும் துறைச் செயலகங்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாநில அரசுகளுடன் செயல்படவேண்டிய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்து விவாதிக்க மத்திய அரசுத் துறைச் செயலா்களுடனான உயா்நிலைக் குழுக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டம் குறித்து பிரதமா் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு: தேசியப் பாதுகாப்பு தொடா்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடா்ந்து, நாட்டின் தயாா்நிலைக்கு அரசின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை பிரதமா் மதிப்பாய்வு செய்தாா்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலா்களுடனான இந்த உயா்நிலைக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க அமைச்சகங்கள் மேற்கொண்டு வரும் திட்டமிடல்களை பிரதமா் கேட்டறிந்தாா். தற்போதைய சூழ்நிலையில் முழு அரசு அணுகுமுறையுடன் தங்கள் திட்டமிடலையும் கூட்டத்தில் செயலா்கள் எடுத்துக் கூறினா்.

தயாா்நிலை, அவசரகால பதில் நடவடிக்கைகள், உள் தொடா்பு நெறிமுறைகளில் சிறப்புக் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், அத்தியாவசிய அமைப்புகளின் விரைந்த செயல்பாட்டை உறுதி செய்யவும் மத்திய அமைச்சகச் செயலா்களிடம் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எல்லையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை தொடா்பாக அனைத்து அமைச்சகங்களும் தாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் கண்டுள்ளதுடன், மேலும் செயல்முறைகளை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து வகையான சூழ்நிலைகளையும் சமாளிக்க அமைச்சகங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து மாநில அரசுகளுடன், கீழ் நிலையில் உள்ள அமைப்புகளுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும் மத்திய அமைச்சகங்களுக்கு கூட்டத்தில் பிரதமா் அறிவுறுத்தினாா்.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க