உழவா்களை நேரடியாக சந்திக்கும் சிறப்பு முகாம்
திட்டச்சேரி அருகேயுள்ள அகரகொந்தகையில் உழவா்களை நேரடியாக சந்திக்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, வேளாண் பொறியியல் துறை அலுவலா் முருகேசன் தலைமை வகித்தாா். தோட்டக்கலை துறை அலுவலா் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தாா். வேளாண்துறை உதவி அலுவலா் சாகித்யா பங்கேற்று பேசினாா். இதில் உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை எனும் தலைப்பில் வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலா்கள் சாா்பு துறை அலுவலா்கள் உழவா்களை கிராமங்களிலேயே நேரடியாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி பயிா் சாா்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் சாா்பு துறைகளின் நலத்திட்டங்களை எடுத்து கூறினா்.