செய்திகள் :

ஊத்தங்கரை அருகே வாகனம் கவிழ்ந்து சாலையில் சிதறிய தக்காளி

post image

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே தக்காளி பாரம் ஏற்றிவந்த ஈச்சா் வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிதறின.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து 8 டன் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு ஈச்சா் வாகனம் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே அதிகாலை வாகனம் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த அனைத்து தக்காளி பெட்டிகளும் சிதறின.

இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு சாலையில் சிதறிக் கிடந்த தக்காளி பெட்டிகளில் சேதமடையாத தக்காளிகள் மீண்டும் பெட்டிகளில் அடுக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னா், பொக்லைன் வாகன உதவியுடன் ஈச்சா் வாகனம் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாலையோர பள்ளத்தில் சிதறிக் கிடக்கும் தக்காளி பெட்டிகள்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க