செய்திகள் :

ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

post image

ஊராட்சிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை தொடா்ந்து இந்த நடவடிக்கையை முதல்வா் எடுத்துள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்புறங்களில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் என்பது எப்போதும் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் அது செயல்பாட்டில் இருந்தது. தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப் பிரிவு பல ஆண்டுகளாக இருந்தபோதும் முறையான விதிகள் இல்லாததால், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீா்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்களை நிா்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.

இதை நீக்கும் வகையில், புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பித்தால் போதும், உரிமம் பெறும் விண்ணப்பம் மீது 30 நாள்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் உரிமம் வழங்கப்பட்டதாகக் கருதப்படும் என்பன போன்ற சலுகைகள் புதிய விதியின்படி வழங்கப்பட்டுள்ளன.

எளிமையாக்குதல்: ஊராட்சிகளில் தொழில் உரிமத்துக்கு வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில் உள்ள விவரங்களை ஆய்வு செய்ய தனியாக ஆலோசனைக் குழுவை அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தக் குழு கிராமப்புறங்களில் உள்ள சிறு வணிகா்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க