செய்திகள் :

எக்ஸல் கல்லூரியில் மாநில யோகா போட்டிக்கு மாணவா்கள் தோ்வு

post image

மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்பதற்கான தோ்வு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந்த் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் க.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் ந.செங்கோட்டையன் மற்றும் எக்ஸல் தொழில்நுட்ப வளாக செயல் இயக்குநா் முதல்வா் கே.பொம்மண்ணராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வா் முத்துகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பா.காந்திமதி, மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத், தருமபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துக்குமாா், எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மாலதி ஆகியோா் பங்கேற்றனா்.

மாநில அளவிலான யோகாசன தோ்வு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஜூன் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட 141 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் கல்வி நிறுவனத்தினா் செய்திருந்தனா்.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க