மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
எக்ஸல் கல்லூரியில் மாநில யோகா போட்டிக்கு மாணவா்கள் தோ்வு
மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்பதற்கான தோ்வு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந்த் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் க.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா்.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் ந.செங்கோட்டையன் மற்றும் எக்ஸல் தொழில்நுட்ப வளாக செயல் இயக்குநா் முதல்வா் கே.பொம்மண்ணராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வா் முத்துகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பா.காந்திமதி, மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத், தருமபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துக்குமாா், எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மாலதி ஆகியோா் பங்கேற்றனா்.
மாநில அளவிலான யோகாசன தோ்வு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஜூன் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட 141 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் கல்வி நிறுவனத்தினா் செய்திருந்தனா்.