செய்திகள் :

எச்சரிக்கை மணியான முதல் தோல்வி..! பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டி!

post image

முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் முதல் தோல்வி விரைவிலேயே வந்தது எச்சரிக்கை மணியாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.

கடந்தாண்டு சாம்பியன் வென்ற கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்ற பஞ்சாப் அணி நேற்றிரவு ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோசமாக தோல்வியுற்றது.

இது குறித்து போட்டி முடிந்த பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது:

எச்சரிக்கை மணி

இலக்கு 180-185 ரன்களாக இருந்திருந்தால் எங்களுக்கு சேஸிக் எளிதாக இருந்திருக்கும். சிறிது ரன்களை அதிகமாக வழங்கிவிட்டோம்.

எங்களது திட்டங்களை நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.

நல்ல வேளையாக இந்தத் தோல்வி தொடரின் ஆரம்ப நிலையிலேயே வந்தது.

இது 3ஆவது போட்டிதான். அதனால், இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்கிறேன்.

பந்துவீச்சில் கவனம் தேவை

மீண்டும் என்ன பிரச்னை என்பதை ஆராய்ந்து அதிலிருந்து வலுவாக திரும்பி வருவோம்.

நிறைய விஷயங்களை இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொண்டோம்.

இந்தப் போட்டியில் ஈரப்பதமும் இல்லை. அதனால் நாம் அதைக் குறைகூற முடியாது.

பந்துவீச்சில் என்ன தவறு செய்தோம் என்பதை விடியோ பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

(மார்கஸ் ஸ்டாய்னிஸ் 48, மார்கோ ஜான்சன் 45 ரன்களை வாரி வழங்கினார்கள்)

பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்க வேண்டும்

பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். தொடச்சியான விக்கெட்டுகளை இழந்தோம். புதிய பேட்டர் அதிரடியாக விளையாட முடியாது.

இளம் வீரர் நேஹல் வதேரா அழுத்தத்திலும் சிறப்பாக விளையாடினார். சற்று நேரமெடுத்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார்.

ரன்கள் குவிக்க ஏற்ற பிட்ச்தான் இது. சற்று நின்று வருகிறது. நாங்கள் பிட்ச்சில் அடித்து பந்து வீசினோம். இன்னும் சிறுது வேகத்தை குறைத்திருக்க வேண்டும்.

வேகமாக அடிக்க முயற்சிக்காமல் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

ஐபிஎல்: நேற்று சென்னை.. இன்று ஹைதராபாத்! 4-ஆவது தோல்வி!

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 153 ரன்கள் வெற்றி இலக்கை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.4 ... மேலும் பார்க்க

முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ... மேலும் பார்க்க

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் களைகட்டுமா? நாளை டிக்கெட் விற்பனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் அடுத்த வெள்ளிக்கிழமை(ஏப். 11) நடைபெறுகிறது.இந்த நிலை... மேலும் பார்க்க

முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்!

தன்னால் முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அண... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் பேட்டிங்; 300 ரன்களா? குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜரா... மேலும் பார்க்க

சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அந்த அணி வீரர் சந்தீப் சர்மா பாராட்டியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ... மேலும் பார்க்க