செய்திகள் :

முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்!

post image

தன்னால் முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சிறப்பானதாக அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 76 ரன்களை அவர் வாரி வழங்கினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 2.3 ஓவர்களில் 33 ரன்களை வழங்கினார். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்ச்சர் விக்கெட் கைப்பற்றத் தவறினார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

இருப்பினும், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசியது குறித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: சிறப்பாக பந்துவீசி நான் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தால், அடுத்து பந்துவீசுபவரும் நன்றாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். பந்தில் அதிகம் ஸ்விங் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பந்தில் அந்த அளவுக்கு ஸ்விங் இல்லை. ஆனால், முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது அணிக்கு உத்வேகமளித்தது என்றார்.

ஆர்சிபிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பும்ரா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும... மேலும் பார்க்க

மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான்: 3-வது போட்டிக்கும் அபராதம்!

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்லோ-ஓவர் ரேட்டில் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.நியூசிலாந்து - ... மேலும் பார்க்க

ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முற... மேலும் பார்க்க

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் வ... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக 4 தோல்விகள்; சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பயிற்சியாளர் கூறுவதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு... மேலும் பார்க்க

ஐபிஎல்: நேற்று சென்னை.. இன்று ஹைதராபாத்! 4-ஆவது தோல்வி!

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 153 ரன்கள் வெற்றி இலக்கை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.4 ... மேலும் பார்க்க