செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் - பரபரக்கும் அரசியல் களம்

post image

2025-26 ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை கடந்த 14 ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடர்

இதனைத்தொடர்ந்து மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம், பதிலுரை மற்றும் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

டெல்லியில் புதிய அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவை ஒட்டி செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி தரப்பு. தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசலாம் என அதிமுக தரப்பை சேர்ந்த சிலர் வெளியே பேசினாலும், கூட்டணி குறித்த விவகாரங்களும் அங்கே பேசப்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடப்பாடி- மோடி

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டமன்ற பரபரப்புக்கு இடையேயும் மேற்கொண்டுள்ள இந்த பயணம் தமிழக அரசியலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கழுகார்: கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ? டு ‘நோஸ் கட்’ செய்த டெல்லி மேடம்..!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ?தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் செயலாளர் திஷா தற்கொலையில் ஆதித்ய தாக்கரேவுக்குத் தொடர்பு? ஷிண்டே அணி சொல்வது என்ன?

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் செயலாளராக இருந்த திஷா சாலியன், மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டா... மேலும் பார்க்க

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" - மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.இதில் புதிய தமிழகம் கட்சியின் தலை... மேலும் பார்க்க

'தமிழகக் கல்வி நிதியை நிறுத்தி வைப்பது நியாயமில்லை' - நிதியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அரசு அதனை ஏற்... மேலும் பார்க்க