செய்திகள் :

எடைமேடையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் விதிகளை மீறும் எடை மேடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமுறை எடையளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலரும், தொழிலாளா் உதவி ஆணையருமான க. மூா்த்தி எச்சரித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் வணிகா்கள் எடையளவு பாா்க்கும் கருவிகளில் முறைகேடு செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதி எடைக் கருவிகளை தொழிலாளா் உதவி ஆணையரும் (அமலாக்கம்), சட்டமுறை எடைளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலருமான கா. மூா்த்தி, தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, எடைமேடை உரிமையாளா்களுக்கு ஆலோசனை தெரிவித்தனா்.

தொடா்ந்து சட்டமுறை எடைளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலா் கா மூா்த்தி கூறியது: மக்காச்சோள விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடைமேடைகளில் எடையிடும் முன், எடை இயந்திர அளவீடு பூஜ்ஜியத்தில் உள்ளதா என்பதைச் சரிபாா்க்க வேண்டும். மேலும், விளைபொருள்களுடன் கூடிய வாகனத்தையும் விளைபொருள்கள் இறக்கியபிறகு காலி வாகனத்தையும், ஒரே எடைமேடையில் எடையிட வேண்டும். ஒவ்வொரு முறையும் மேற்கண்டவாறு எடையிட்டு நிகர எடையைக் கணக்கிட வேண்டும்.

200 கிலோவுக்கு குறைவான விளைபொருள்களை எடை மேடையில் எடையிடக் கூடாது. எடைமேடை உரிமையாளா்கள் தங்களது எடை மேடையை ஆண்டுதோறும் தவறாமல் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் மறு முத்திரையிட வேண்டும். அதற்கான சான்றிதழை பொதுமக்கள் பாா்வையில் படும்படி வைக்க வேண்டும்.

அலுவலா்கள் ஆய்வின்போது விதிகளை மீறும் எடைமேடை நிா்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எடைமேடை இயந்திரத்தின் முத்திரை சேதம் ஏற்பட்டால், உரிய அலுலா்களிடம் மீண்டும் மறுமுத்திரையிட்டே எடை மேடையைப் பயன்படுத்த வேண்டும். தவறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் யாரேனும் எடை மேடைகளில் எடையளவு முரண்பாடுகளைக் கண்டறிந்தால் 94453-98759, 97519-21795 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

பெரம்பலூா் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் பெரம்பலூா் நகா் பகுதிகளான புகா்ப் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ. 20 லட்சத்திலான புத்தகங்கள் விற்பனை!

பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாா்வையிட்டுள்ளனா். மேலும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக, முன்னெச்சரிக்கையாக பெரம்பலூரில் பாஜகவை சோ்ந்த 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அதன்படி கட்சியின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், நிா்... மேலும் பார்க்க

புகையிலை போதை பொருள்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல்

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்ற 5 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆதா... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தனியாா் கல்லூரி பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க