செய்திகள் :

எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பனகல் அரசரின் பிறந்த தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

இடஒதுக்கீடு நமது உரிமை என்று நாம் தலைநிமிா்ந்து முழங்க நூற்றாண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரி அரசாணை மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகா்தான் பனகல் அரசா். திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு போன்று 3,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் அன்றே இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றி விதையூன்றினாா் பனகல் அரசா்.

ஆதிதிராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரா். நீதிக் கட்சியின் நீட்சியாக, எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் திராவிட மாடல் அரசு சாதிக்க அடித்தளமிட்ட பனகல் அரசரின் பிறந்த நாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன் என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: ‘மருத்துவக் கல்லூரியில் சேர சம்ஸ்கிருதம் ஓா் அடிப்படைத் தகுதி என்றிருந்த நிலையை ஒழித்து சாமானிய மக்களும் மருத்துவராகும் வாய்ப்பை ஏற்படுத்தியவா் நீதிக் கட்சியின் முதல்வா் பனகல் அரசா். கோயில் சொத்துகளை நிா்வகிக்க இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கிய மகத்தான புரட்சியாளா்.

இந்தியாவிலேயே முதல்முதலில் பெண்களுக்கான தோ்தல் வாக்குரிமை வந்ததும் பனகல் அரசா் ஆட்சிக் காலத்தில்தான். ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதியின் பெயரால் இழிவுசெய்வதைத் தடுக்க அவா்களை ‘ஆதிதிராவிடா்’ என்று குறிப்பிட உத்தரவிட்டவா்.

பனகல் அரசரின் வழியில், ஊா்ப்பெயா்களில் ‘காலனி’களை நீக்கியும், மாணவா் விடுதிகளுக்கு சமூக நீதி விடுதிகள் என்று பெயரிட்டும் மக்களின் சுயமரியாதை காக்கும் அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு’ என்று தனது பதிவில் துணை முதல்வா் உதயநிதி தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் செ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க