செய்திகள் :

எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணா... நெகிழ்ச்சியாகப் பேசிய ஜிதேஷ் சர்மா!

post image

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்சிபி வீரர் அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து பேசியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். கடந்தாண்டு ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக் தற்போது பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ஜிதேஷ் சர்மாவை உருவாக்கியதில் தினேஷ் கார்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஏற்கனவே ஜியோ ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியில் இது குறித்து ஜிதேஷ் சர்மா பேசியுள்ளார்.

நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற போட்டியில் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுவென்ற ஜிதேஷ் சர்மா பேசியதாவது:

என்னால் எனது எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை. இப்படி ஆடுவேன் என நான் நினைக்கவில்லை. விராட் கோலி ஆட்டமிழந்ததும் நான் ஆட்டத்தைக் கடைசிவரை எடுத்துச்செல்ல நினைத்தேன்.

எனது ஆலோசகர் எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணா ‘ஆட்டத்தைக் கடைசிவரை கொண்டுசெல். எந்தச் சூழ்நிலையில் இருந்தும் உன்னால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் அளவுக்கு திறமை இருப்பதாக’ எப்போதும் சொல்லுவார்.

எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. ஏனெனில் எனக்கு அனைத்து பாரங்களும் என் மீது விழுந்தது. எனக்கு விராட், க்ருணால், புவனேஷ்வர் இருக்கிறார்கள். அவர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியாக உணர்கிறேன். கணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க நினைக்கிறேன். இந்தச் சிறப்பான தருணத்தை அடுத்த போட்டிக்கும் கொண்டுச் செல்ல விரும்புகிறேன்.

ரஜத்தின் சாதனையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது. அவருக்குதான் எல்லா புகழும். எங்கள் அணியில் பல ஆட்ட நாயகர்கள் இருக்கிறார்கள். ஹேசில்வுட் பிளே ஆஃப்ஸில் விளையாடுவார் என்றார்.

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி!

குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் இ... மேலும் பார்க்க

ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

ஆர்சிபி அபார பந்துவீச்சு; விக்கெட்டுகளை இழந்து திணறும் பஞ்சாப் கிங்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டி... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 1: ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஜோஸ் ஹேசில்வுட்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல்... மேலும் பார்க்க

ஐபிஎல் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ்: மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீச... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் வெற்றி சதவிகிதம்..! ஆர்சிபிக்கு 7-ஆவது இடம்!

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் ஒவ்வொரு அணிகளின் வெற்றி சதவிகிதம் குறித்த பட்டியலில் ஆர்சிபி 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை, சிஎஸ்கே தலா 5 கோப... மேலும் பார்க்க