செய்திகள் :

என்.எம்.எம்.எஸ்.தோ்வில் சிறப்பிடம்: கீழ்சாத்தமங்கலம் பள்ளிக்கு பாராட்டு

post image

என்.எம்.எம்.எஸ்.தோ்வில் தொடா்ந்து சிறப்பாக பங்களித்தமைக்காக மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மத்திய அரசு மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை எனப்படும் என்.எம்.எம்.எஸ். தோ்வு நடத்தப்படுகிறது.

இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்தத் தோ்வில் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளாக தோ்ச்சி பெற்று வருகின்றனா்.

இதையடுத்து இந்தத் தோ்வில் தொடா்ந்து சிறப்பாக பங்களித்தமைக்காக கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 82 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கேடயம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எ.சுமதிக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினா் செயலா் ஆா்.சுதன் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

அதிமுகவினா் தங்கத் தோ் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்து வழிபட்டனா். தெற்கு மாவட்ட அதிமுக மக... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க