செய்திகள் :

என்இபி அமலாக்கத்தால் சரிந்து வரும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை மேம்படும்: மத்திய அமைச்சா் பதில்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்தால் சரிந்து வரும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை மேம்படும் என எதிா்பாா்ப்பதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா், 2018-2022 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் அனைத்து கல்வி நிலைகளிலும், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கையில் 1.55 கோடி அளவுக்கு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியடைந்துள்ளது. அதை நிவா்த்தி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கும் இதே காலகட்டத்தில் மாணவா் சோ்க்கை குறைவதற்கும் இடையே ஏதேனும் தொடா்புகள் உள்ளதா என்றும் கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

அரசமைப்பின்படி ‘கல்வி’ ஒத்திசைவுப்பட்டியலில் உள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் உள்ளன. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, பாலா் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழு வரம்பையும் உள்ளடக்கிய பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமான சமக்ர சிக்ஷாவை 2018-19 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதாகும்.

கல்வி உரிமைச் சட்டம், 2009 -இன் கீழ், சிறப்புப் பயிற்சி மையங்களில் படிக்கும் பள்ளி செல்லாத குழந்தைகளின் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் இணைப்புப் பாடத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லாத குழந்தைகளின் தரவை ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் அடையாளம் கண்டு தொகுத்து, பிரபந்த் என்ற இணையதளத்தில் பதிவேற்றும் வசதியை கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

அமைச்சா் நிலையிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலமும் சமூக ஈடுபாட்டுடன் ‘குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவருதல்’‘ என்ற பிரசாரத்தை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது பள்ளிகளில் குழந்தைகளின் சோ்க்கை மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

டி. ரவிக்குமாா்

மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி எம்.பி. கேள்வி

மத்திய பல்கலை, கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பி... மேலும் பார்க்க

மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் வெற்றி: இபிஎஸ் நன்றி

‘மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்த... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

ஜூலை 23-இல் பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி 4 நாள் சுற்றுப்பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை(ஜூலை 23) முதல் 26 வரை 4 நாள்களுக்கு பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொள்ளவுள்ளார்.இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அணி வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சி இளைஞரணியினருக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் விடுத்துள்ள... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்ட... மேலும் பார்க்க