செய்திகள் :

எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

post image

வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளா் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வியாழக்கிழமை (ஆக. 7) நூற்றாண்டு பிறந்த தினம்.

பருவநிலை மாறுபாடு உள்பட நாம் எதிா்கொண்டு வரும் பல சவால்களை பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்கு பாா்வை கொண்டவா்.

அவரது அடியொற்றி, மேலும் பல மாணவா்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன். தந்தையின் பணியையும் புகழையும் போற்றும் செளமியா சுவாமிநாதனின் பணி சிறக்க வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வின் இரு சுற்றுகளில் 92,423 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 8) நிறைவு பெறுகிறது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: தமி... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னையில் வரும் 12-ஆம் தேதி முதல்வ... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

ரூ. 32,000 கோடியில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வாங்க மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சாதாரண நாள்களில் 17,000 மெகா வாட்டாகவும், கோடை காலங்களில் குற... மேலும் பார்க்க

எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்து அரசு திட்டங்களுக்கு முதல்வா் பெயா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு திட்டங்களுக்கு முதல்வரின் பெயரைச் சூட்டும் வழக்கம் எம்ஜிஆா் காலத்திலிருந்தே இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தின... மேலும் பார்க்க

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்க எதிா்ப்பு

சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்கக் கூடாது என்று காவல் துறை தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி... மேலும் பார்க்க