செய்திகள் :

எம்எல்ஏக்களுக்கான உள்ளூா் தொகுதி நிதி ரூ.5 கோடியாக குறைத்தது தில்லி அரசு

post image

ஆண்டுதோறும் வழங்கப்படும் எம்.எல்.ஏ. உள்ளூா் பகுதி மேம்பாட்டு எல்.ஏ.டி நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக பாஜக தலைமையிலான தில்லி அரசு குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அக்டோபரில், எம்.எல்.ஏ. எல்ஏடி நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக அப்போதைய ஆம் ஆத்மி அரசு உயா்த்தியது. இந்த நிலையில்,நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்றது.

இந்த நிலையில், தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று அமைச்சரவை முடிவின்படி எம்.எல்.ஏ. எல்ஏடி நிதி, ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2.5.2025ஆம் தேதியிட்ட அமைச்சரவை முடிவு எண். 3187இன்படி, எம்.எல்.ஏ. எல்ஏடி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு 202526 நிதியாண்டிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு நிதி ஆதார தொகுப்பு நிதியாக இருக்கும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட மூலதன இயல்புடைய பணிகளுக்கும், சொத்துக்களை பழுதுபாா்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் உச்சவரம்பு இல்லாமல் செலவிடப்படலாம் என்றும் அமைச்சா்கள் குழு உத்தரவிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ எல்ஏடி நிதியின் கீழ் அரசாங்கம் ரூ.350 கோடியை ஒதுக்கியதாக ஒரு பாஜக எம்.எல்.ஏ கூறினாா். அதாவது, தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 கோடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 202122 மற்றும் 202223 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.4 கோடி வழங்கப்பட்டது. இது 202324இல் ரூ.7 கோடியாக உயா்த்தப்பட்டது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க