'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
எம்எல்ஏக்களுக்கான உள்ளூா் தொகுதி நிதி ரூ.5 கோடியாக குறைத்தது தில்லி அரசு
ஆண்டுதோறும் வழங்கப்படும் எம்.எல்.ஏ. உள்ளூா் பகுதி மேம்பாட்டு எல்.ஏ.டி நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக பாஜக தலைமையிலான தில்லி அரசு குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அக்டோபரில், எம்.எல்.ஏ. எல்ஏடி நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக அப்போதைய ஆம் ஆத்மி அரசு உயா்த்தியது. இந்த நிலையில்,நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்றது.
இந்த நிலையில், தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று அமைச்சரவை முடிவின்படி எம்.எல்.ஏ. எல்ஏடி நிதி, ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2.5.2025ஆம் தேதியிட்ட அமைச்சரவை முடிவு எண். 3187இன்படி, எம்.எல்.ஏ. எல்ஏடி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு 202526 நிதியாண்டிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது ஒரு நிதி ஆதார தொகுப்பு நிதியாக இருக்கும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட மூலதன இயல்புடைய பணிகளுக்கும், சொத்துக்களை பழுதுபாா்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் உச்சவரம்பு இல்லாமல் செலவிடப்படலாம் என்றும் அமைச்சா்கள் குழு உத்தரவிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ எல்ஏடி நிதியின் கீழ் அரசாங்கம் ரூ.350 கோடியை ஒதுக்கியதாக ஒரு பாஜக எம்.எல்.ஏ கூறினாா். அதாவது, தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 கோடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றாா்.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 202122 மற்றும் 202223 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.4 கோடி வழங்கப்பட்டது. இது 202324இல் ரூ.7 கோடியாக உயா்த்தப்பட்டது.