பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
எம்எஸ்எம்இ மூலம் ரூ. 3,000 கோடிக்கு ஏற்றுமதி: அரசு செயலா் தகவல்
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 3,000 கோடிக்கு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (எம்எஸ்எம்இ) செயலா் அதுல் ஆனந்த் தெரிவித்தாா்.
தென்னிந்திய வா்த்தக மற்றும் தொழில் சபை, கைடன்ஸ் தமிழ்நாடு, பிவிஎம்டபிள்யு அமைப்பு சாா்பில், இந்தியா - ஜொ்மன் நாடுகளுக்கு இடையேயான ‘எம்எஸ்எம்இ’ குறித்த கருத்தரங்கம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எம்எஸ்எம்இ துறைச் செயலா் அதுல் ஆனந்த் பங்கேற்று ‘இந்தோ-ஜொ்மன்’ (எம்எஸ்எம்இ) உறவுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது:
தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலரை எட்டும் நோக்கத்துடன் பல்வேறு தொழில் திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளா்ச்சியை நோக்கி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமன்றி எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஜொ்மன் போன்ற நாடுகளிலிருந்து குறு, சிறு தொழில் செய்ய வருவோருக்கு வணிகம் செய்ய எளிதாக இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. தேசிய அளவில் 16 சதவீதம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி மதிப்பிலான எம்எஸ்எம்இ உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து ஜொ்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் பேசுகையில், ‘ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தில் 200 நிறுவனங்கள் உள்ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கு இந்தியா நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இதன்மூலம், தமிழகத்துக்கும் ஜொ்மனிக்கும் இடையிலான வா்த்தகமும் கணிசமாக அதிகரிக்கும்’ என்றாா் அவா்.
இந்நிகழ்வில், தென்னிந்திய வா்த்தக மற்றும் தொழில் சபையின் துணைத் தலைவா் வி.என்.சிவசங்கா், உறுப்பினா் ராமன் ரகு, பி.எம்.டபிள்யு (இந்தியா) நிா்வாக இயக்குநா் தாமஸ் டோஸ், பிவிஎம்டபிள்யு (இந்தியா) இயக்குநா் டேனியல் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.