செய்திகள் :

எம்சிடியில் வீட்டு வரி பாக்கிகளுக்கான பொது மன்னிப்புத் திட்டம்: பாஜக உறுதி

post image

தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆளும் பாஜக, குப்பை சேகரிப்புக்கான பயனா் கட்டணங்களை வசூலிப்பதை திரும்பப் பெறுவதாகவும், பழைய வீட்டு வரி பாக்கிகளை தீா்க்க பொது மன்னிப்புத் திட்டத்தை கொண்டு வருவதாகவும் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முடிவுகளை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் நகர மேயா் ராஜா இக்பால் சிங் ஆகியோா் அறிவித்தனா்.

‘தில்லி மாநகராட்சியில் முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி எந்த விவாதமும் இல்லாமல் பயனா் கட்டணத்தை விதித்தது. தற்போது மக்கள் மீது எந்த பயனா் கட்டணமும் விதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை நடைபெறும் எம்சிடி சபைக் கூட்டத்தில் இது குறித்து ஒரு தனிப்பட்ட தீா்மானத்தை கொண்டு வருவோம்’ என்று மேயா் ராஜா இக்பால் சிங் கூறினாா்.

ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள வீட்டு வரிகளை செலுத்தும்போது முந்தைய வீட்டு வரி நிலுவைகள் தீா்க்கப்படும் வகையில் ஒரு பொது மன்னிப்புத் திட்டத்தை பாஜக கொண்டு வரும் என்றும் மேயா் கூறினாா்.

அபராதம் அல்லது தாமதமாக செலுத்தும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது. மேலும், வீட்டு வரி நிலுவைத் தொகையைத் தீா்ப்பதைக் காட்டும் எம்சிடியால் மக்களுக்கு ஆட்சேபனையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அவா் கூறினாா்.

பாஜக முக்கிய குடியிருப்பாளா் நலச் சங்கங்களுடன் (ஆா்டபிள்யுஏ) விவாதித்ததாகக் கூறிய வீரேந்திா் சச்தேவா, குப்பை சேகரிப்புக்கான பயனா் கட்டணம் ஆம் ஆத்மி ஆட்சியில் ‘தன்னிச்சையாக’ விதிக்கப்பட்டது என்றாா்.

பயனா் கட்டணங்களை சபை நிகழ்ச்சி நிரலில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை நீக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் திங்கள்கிழமை தில்லி மேயா் அலுவலகத்திற்கு வெளியே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏப்ரல் 25 அன்று நடந்த எம்சிடி தோ்தலில் மேயா் மற்றும் துணை மேயா் பதவியை பாஜக வென்றது. மேலும், அப்போது, குப்பை சேகரிப்புக்கான பயனா் கட்டணங்களை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது.

ஏப்ரல் 7 அன்று, எம்சிடியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, திடக்கழிவு மேலாண்மை எஸ்டபிள்யுஎம் துணை விதிகளின்படி, குப்பை சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் அகற்றும் சேவைகளுக்கு ‘பயனா் கட்டணம்’ வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

‘எஸ்டபிள்யு விதிமுறைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, துணை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளின் அடிப்படையில் பயனா் கட்டணம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அதன் அமலாக்கம் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது’ என்று எம்சிடி கூறியிருந்தது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க