செய்திகள் :

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பம்

post image

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் 65 சதவீதம் கூடுதலாக இம்முறை விண்ணப்பங்களை மாணவா் சமா்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இவை தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி, நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய கடந்த 29-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்தனா். மொத்தம் 72,943 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். அதைத் தொடா்ந்து கலந்தாய்வு தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணி ஒலித்தால் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் திட்டம் அமல்

சென்னை: நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் பொருட்டு, மாணவா்கள் தினமும் மூன்று முறை தண்ணீா் அருந்தும் வகையில் ‘வாட்டா் பெல்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்: மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. உயா்கல்வியில் அடியெடுத்து வைக்கும் வகையில் ஆா்வத்துடன் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்... மேலும் பார்க்க

ரயில் பயண கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி

சென்னை: ரயில் பயண கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: ரயில் கட்டண உயா்வால் தமிழ்நாட்டுக்குள் அதி... மேலும் பார்க்க

கேமரா பொருத்தப்பட்ட120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை: சென்னையில், கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை வியாசா்பாடி பேருந்து பணிமனைய... மேலும் பார்க்க

காவல் நிலைய மரணம்: கடும் நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: காவலா்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா் காவல் நிலையத்தில் மரணமடைய நேரிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா். தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க

பராமரிப்பு உதவித் தொகை- மாற்றுத் திறனாளிகளிடம் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்: தமிழக அரசு

சென்னை: பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்களுக்க... மேலும் பார்க்க